எறிபத்த நாயனார் கரூர் என்று அழைக்கப்படுகின்ற கருவூரில் பிறந்தவர். சிறந்த சிவபக்தர். ஆனிலைப் பெருமானை வழிபடுகின்ற சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டவர். சிவனடியார் வழிபாட்டில் எவர் கெடுதல் செய்தாலும், அவர்களது வழிபாட்டிற்குத் துன்பம் விளைவித்தாலும் அவர்களை மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு தீவிர பக்தி கொண்டிருந்தார்.
அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் தினந் தோறும் நந்தவனத்திற்குச் சென்று மலர் கொய்து மாலை கட்டி ஆனிலைப் பெருமானுக்குச் சாத்தி வந்தார்.
மகாநவமிக் கொண்டாட்டங்களுக்கு முந்தைய
நாள் காலை அவர் மலர்
பறித்துக் கூடையில் நிரப்பி அக் கூடையைக் கோலில் தொங்கவிட்டு வீதியில் வந்தார். அப்போது புகழ்ச்சோழ மன்னனது பட்டத்து யானை
ஆற்றில் நீராடிவிட்டு
அவ்வழியே வந்தது.
சிவகாமியாண்டாருடைய பூக்கூடையைப் பறித்துக் கீழே சிதறிவிட்டுச் சென்றது. யானைப் பாகரும் யானையை கட்டுப்படுத்த இயலாது,
யானையை வேகமாக நடத்திச் சென்றார். சிவகாமியாண்டார் ஒன்றும் செய்ய இயலாதவராய்ப்
பெருமானை “சிவதா சிவதா” என்று முறையிட்டார். அடியார்க்கு நேர்ந்த துன்பங்களைக் கேட்டாறிந்த எறிபத்தர் அதிவேகமாகச்
சென்று யானையின் துதிக்கையை தனது மழுவால் வெட்டினர். யானை அலறிக்கொண்டு கீழே விழுந்து
மாய்ந்தது. யானையைக் கட்டுப்படுத்தாத பாகர்களையும் மழுவால் தாக்கிக் கொன்றார்.
இச்
செய்தியைப் புகழ்ச்சோழர் கேள்வியுற்றார். மிருந்த கோபங்கொண்டார். உடனே குதிரையில் ஏறிச்
சேனைகளுடன் புறப்பட்டு யானை இறந்த இடத்திற்கு சென்றுஅங்கு மழுவுடன் நின்றுகொண்டிருந்த
சிவனடியாரான எறிபத்தரைக் கண்டார். மன்னர் ஆச்சரியப்பட்டு, "அன்பின் வடிவமான பக்தர்கள்
எரிச்சலடைந்திறார் என்றால், இதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும் எனக்
கருதி, அவர் தனது குதிரையிலிருந்து இறங்கி, எறிபத்தரை வணங்கி, "யானையும் காவலர்களும்
செய்த குற்றம் என்ன“ என்று வினவினார்.
அப்பொழுது
இருவரும் கேட்கும்படி “ உங்கள் மெய்யன்பை உலகம் அறிந்து கொள்ளவே இத்நிகழ்ச்சி ஏற்பட்டது"
என ஓர் ஆசரீரி வாக்கு வானில் அதைக் கேட்டு இருவரும் ஒருவரை வணங்கினர்.
அதன் பிறகு எறிபத்தர் சிலகாலங்கள் வாழ்ந்து சிவபதம் அடைந்தார். எறிபத்த நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
பூக்குடலை
விழா:
இந்நிகழ்ச்சியின்
நினைவாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அஷ்டமியன்று, பக்தர்கள்
பூக்குடலை ஏந்தி, பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறபபாடு ஆகி, மேளதாளத்துடன் கரூர்
முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, இறைவனுக்கு பூக்களை சமர்பித்து வழிபட்டு
வருகிறார்கள்.
No comments:
Post a Comment